சத்தமே இல்லாமல் சீன விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு
இன்றைய நவீன யுத்தம் ஆளில்லா விமானங்களால் ஆனதாக மாறிவிட்டது.உக்ரைன் ரஷ்யா இடையிலான யுத்தம், இஸ்ரேல் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல்,ஈரான் இடையிலான யுத்தம் என்பன எதிரிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்த யுத்தம் ஆரம்பித்த பின்னர் நாடுகள் ஆளில்லா விமானங்களை பாரியளவில் உற்பத்தி செய்யவும் தொடங்கி விட்டன. இவ்வாறு உற்றபத்தி செய்யப்படும் இந்த ஆளில்லா விமானங்கள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுவதுதான் அதிசயம்.
கொசு போன்ற ஆளில்லா விமானம்
அந்த வகையில் அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில் சத்தமே இல்லாமல் தனது படை பலத்தை அதிகரித்து வரும் சீனா,தற்போது கொசு போன்ற ஆளில்லா விமானமொன்றை தயாரிதது உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன விஞ்ஞானிகள் இந்த ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளதாக சவுத் சைனா மோனிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் ஆய்வகத்தால் இந்த குட்டி மைக்ரோ விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அல்லது உளவுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம்
இதில் இரண்டு சிறிய இறக்கைகளும் இருபுறமும் இலை போன்ற அமைப்புகளையும் கொண்டுள்ளது. ஒரு கைபேசி மூலம் இந்த மைக்ரோ ட்ரோனை கட்டுப்படுத்த முடியும். சுமார் 1.3 சென்டிமீட்டர் நீளமுள்ள சிறிய ட்ரோன் ரகசிய ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.
இவற்றை கண்காணிப்பு அல்லது உளவுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். அவசர காலங்களில் இடிபாடுகள் அல்லது குப்பைகளுக்கு இடையே ஊடுருவி தப்பி பிழைத்தவர்களை கண்டறியவும் இந்த ட்ரோன் உதவும். காற்று தரம் அல்லது நீரின் தரம் போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளை கண்காணிக்கவும் இதில் சென்சார்கள் பொருத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
