சிஐடிக்கு சவாலாக மாறிய சுரேஷ் சலேயின் மடிக்கணினி! எழுந்துள்ள சிக்கல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முன்னாள் உத்தியோகபூர்வ உடைமைகள் அனைத்தும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகச் சுரேஷ் சலேயின் தரப்பு தெரிவித்தாலும் விசாரணையில் சிஐடி (CID) தேடும் குறிப்பிட்ட மடிக்கணினி எது என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட கணினிகளைத் தாண்டி சிஐடி தேடும் மடிக்கணினியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய டிஜிட்டல் தடயங்கள் அல்லது தகவல்தொடர்புகள் இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
சுரேஷ் சலே கணினி தொழில்நுட்பத்திலும் ஹேக்கிங்கிலும் மிகத் தேர்ந்தவர் என்ற தகவல், இந்த விவகாரத்தைச் சாதாரண விடயமல்லாமல் ஒரு தொழில்நுட்ப வல்லுநரால் தரவுகளை முற்றாக அழிக்கவோ மாற்றி அமைக்கவோ அல்லது மறைக்கவோ முடியும் என்பதால் சிஐடிக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.
இந்தநிலையில் சுரேஷ் சலேயின் மடிக்கணினி விவகாரம் என்பது வெறும் தொழில்நுட்பக் கோளாறு அல்லாமல் அது பல அரசியல் இரகசியங்களை உள்ளடக்கிய ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்