கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி...!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் ஜிந்துப்பிட்டி வீதிப் பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்றுள்ளது.
அத்தோடு இச்சம்பவத்தில் சிறுவன் ஒருவரும் மற்றும் சிறுமி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரதான துப்பாக்கிதாரி மாறுவேடத்தில் வந்து துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்