ட்ரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் புடின் - நெதன்யாகுவின் திடீர் கூட்டணி...!
மத்திய கிழக்கிலும் ஈரானிலும் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்ததன் எதிரொலியாக கடந்தாண்டு டிசம்பரில் இருந்து மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வரும் சூழலில் கிட்டத்தட்ட 3000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய ஆலோசனை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈரான் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் புடின், நெதன்யாகுவுடன் தொலைபேசி வழியே முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு மற்றும் ஈரான் நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழல் குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதுகுறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈரான் விவகாரம் தொடர்பாக நெதன்யாகுவுடன் புடின் ஆலோசனை நடத்தினார்.
பிராந்தியத்தில் காணப்படும் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் அதற்கான தீர்வு பற்றி இருவரும் விவாதித்தனர்.
அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து நெதன்யாகுவுடன் புடின் கலந்துரையாடினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |