2026 முதல் காலாண்டில் கொழும்புத் துறைமுகம் கொள்கலன் கையாளுதலில் புதிய உச்சம்
நாட்டில் 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கொழும்புத் துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 623,719 கொள்கலன் அலகுகள் கையாளப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கை 761,096 ஆக உயர்ந்துள்ளது. இது 22 சதவீத வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
அதிகாரபூர்வ தரவுகள்
மேலும், இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 29,15,004 கொள்கலன் அலகுகள் கையாளப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 25,59,847 கொள்கலன் அலகுகள் மட்டுமே கையாளப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு 3,55,157 கொள்கலன் அலகுகள் அதிகரித்துள்ளதுடன், 13.9 சதவீத ஆண்டு வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.
கொழும்புத் துறைமுகம் தெற்காசியாவின் முக்கிய மறுஏற்றுமதி மையங்களில் ஒன்றாக தொடர்ந்து தனது நிலையை தக்கவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |