கொரோனாவுக்கெதிரான மற்றுமொரு சுதேச மருந்து- குணமடையவில்லையெனில் தற்கொலை!
கொரோனா வைரஸை முற்றிலுமாக அடக்கும் ஒரு உள்ளூர் மருந்தை உருவாக்கியுள்ளதாக சுதேச மருத்துவர் கலுதரேஜ் சம்பத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தை மக்கள் ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டைய மருத்துவ பரிந்துரைகளின்படி தயாரிக்கப்படும் சுமார் இருபத்து நான்கு வகையான மருந்துகள் இங்கு உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருதுத்துத் தெரிவித்த அவர், மேலும் பண்டாரநாயக்க ஆராய்ச்சி நிறுவனம் இதை ஆய்வு செய்து அதற்கான சான்றிதழை வெளியிட்டுள்ளதாகவும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 150 பேர் குணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இதைக் குடித்தால், அவர் 3 நாட்களில் முழுமையாக குணமடைவார் என்றும், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் மருந்து உட்கொண்ட மூன்று நாட்களுக்குள் குணமடையவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.