திருகோணமலை - கொழும்பு இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்!
மிக நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு - திருகோணமலை இடையிலான இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமானது.
இதனடிப்படையில், நேற்று (20-01-2026) இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி சேவை ஆரம்பமாகியுள்ளது.
பயணிகளுக்கான வசதிகள் கடந்த ஓரிரு மாத காலமாகத் தடைப்பட்டிருந்த இந்த இரவு நேரச் சேவையானது தற்போது ஆரம்பமானதால், பொதுமக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.
ஆசனப் பதிவு
கடமை நிமித்தம் கொழும்பு நோக்கிச் செல்லும் அரச அதிகாரிகள் அதிகளவில் ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு இச்சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
அத்துடன், இப்புகையிரத சேவை ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விபத்து அபாயம் குறித்து எச்சரிக்கை இச்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பல புகையிரதக் கடவைகளில் இரவில் வீதி மின்விளக்குகள் இன்மையால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகக் காணப்படுகிறது.
இது தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளருக்குப் பலமுறை அறிவித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் பராமுகமாக இருந்து வருவதை அறிய முடிகின்றது.
எனவே, இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைப் போன்று, புகையிரதக் கடவைகளுக்கான வீதி மின்விளக்குகளையும் தாமதமின்றிப் பொருத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |