சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக சட்டமூலம் - கோட்டாபயவிடம் விளக்கம் கோரவுள்ள பௌத்தபீடம்
colombo
china
gotabaya
colomboportcity
By Sumithiran
இலங்கையில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பில் அஸ்கிரியபீடம் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விளக்கம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அஸ்கிரிய பீடத்தின் பிரதான பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த போது இதனைக் கூறியுள்ளார்.
ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச மற்றும் இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடமேற்ற பெரும் பங்காற்றிய முத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோர் இந்த சட்டமூலத்திற்கு எதிராக அபயராம விகாரையில் ஊடக சந்திப்பை நடத்தி கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி