ஜனாதிபதி செயலக அதி சொகுசு வாகன ஏலத்திற்கு எதிராக முறைப்பாடு
ஜனாதிபதி செயலகத்தில் அதிசொகுசு வாகனங்கள் ஏலம் விடப்பட்ட சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவர்ணபூமி தேசிய இயக்கத்தின் (Swarnabhoomi National Movement) தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய (Asanka Ruwan Pothupitiya) இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்கள் விலைமனு கோரல் செயல்முறை மூலம் வழங்கப்பட்டதாகவும், மதிப்பிடப்பட்ட பெறுமதி மிகக் குறைவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
26 வாகனங்கள்
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், விலைமனு கோரல் மதிப்பீடு குறைவாக இருப்பதால் வாகனங்களுக்காக வழங்கப்படும் பணம் போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ள வாகன ஏலங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுவர்ணபூமி தேசிய இயக்கம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி செயலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் ஏலமிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
