தீயில் சிக்கிய பெற்றோல் விற்பனை நிலையம்! உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை
திருகோணமலையில் பெற்றோல் கடை ஒன்று தீப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட, கண்டி திருகோணமலை 99ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள பெற்றோல் கடை ஒன்றே இன்று மதியம் தீப்பற்றியுள்ளது.
குறித்த பெற்றோல் கடையின் உள் பகுதியில் சோளக் கதிரை தீமூற்றி அடுப்பில் வைத்திருந்த நிலையில் பெற்றோல் தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
பிரதேச வாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் கடை உரிமையாளரான இரு பிள்ளைகளின் தாயான எச்.எம்.சம்சுநிசா (வயது45) தீக்காயங்களுக்கு உள்ளானதுடன் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் காவல்துறையினர் சென்று விசாரனைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
