கடும் நெருக்கடிக்குள்ளும் சிறிலங்காவின் அடுத்தகட்ட நகர்வு! உறுதிப்படுத்திய மத்திய வங்கி ஆளுநர்
சிறிலங்காவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை முறி கடனை செலுத்தியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளதாவது,
இன்று (18) செலுத்த வேண்டியிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை முறி கடனை செலுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம், சர்வதேச முதலீடுகள் சேவை தரப்படுத்தல் நிறுவனங்களான, Moody's Investors Service, Fitch Ratings, S&P Global Ratings ஆகிய நிறுவனங்களை Tag செய்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அரசாங்க திட்டங்களுக்கு நிதியளிப்பது, பழைய கடனை செலுத்துதல், தற்போதைய கடனுக்கான வட்டி மற்றும் ஏனைய அரசாங்க செலவினத் தேவைகளுக்கு பணம் திரட்டுவதற்காக தேசிய அரசாங்கத்தால் வழங்கப்படும் கடன் பாதுகாப்பே ஒரு இறையாண்மை முறியாகும்.