இலங்கை தமிழரசு கட்சிக்குள் கடும் குழப்பம்

Batticaloa Ilankai Tamil Arasu Kachchi S. Sritharan
By Sumithiran Feb 01, 2024 06:19 PM GMT
Report

தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் தாய்க் கட்சி கட்சி தாங்கள்தான் என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை(01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விடுதலை புலிகள் காலத்தில் பலமாக இருந்த தமிழர்கள்

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகள், ஒன்றாக பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும். 2009 இற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு அரசியல் சக்தியாக இருந்தது. அந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்கூட இயங்கு நிலையிலிருந்தார்கள். நாங்கள் ஆயுதரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் பலமாக இருந்தோம்.

இலங்கை தமிழரசு கட்சிக்குள் கடும் குழப்பம் | Confusion Within The Sri Lankan Tamil Arasu Party

2009 இற்குப் பின்பு ஆயுத ரீதியாக நாங்கள் செயற்பட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கும் நிலையில் மிகவும் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்காலகட்டத்தில் சிதைந்து பல்வேறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன்...!

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன்...!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த தமிழரசுக் கட்சி

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 2004 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியமான கட்சியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்றது.

இலங்கை தமிழரசு கட்சிக்குள் கடும் குழப்பம் | Confusion Within The Sri Lankan Tamil Arasu Party

இதன்போது தமிழீழ விடுதலை இயக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் எதிர்ப்பு பேரணி

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் எதிர்ப்பு பேரணி

2009 இற்குப் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கூட சிதைவடைவதற்குக் காரணமும்கூட அக்கூட்டமைப்பை பதிவு செய்யாததுதான்.

வரலாற்றில் வாக்கெடுப்பில் தெரிவான தலைவர்

இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அக்கட்சியின் தலைவர் கூட வரலாற்றிலே வாக்களிப்பின் மூலம் தெரிவாகியிருக்கின்றார். அவர்களின் தேசிய மாநாடு கடந்த 28 ஆம் திகதி நடைபெறவிருந்தது அது நடைபெறவில்லை. செயலாளர் மற்றும் ஏனைய நிருவாகங்களுக்கான தெரிவுகள்கூட நடைபெற்றிருக்கின்றது ஆனால் அது ஒழுங்காக நடைபெறவில்லை என ஒருசாரார் சொல்கின்றார்கள்.

இலங்கை தமிழரசு கட்சிக்குள் கடும் குழப்பம் | Confusion Within The Sri Lankan Tamil Arasu Party

இந்த நிலையில் ஒன்றை தமிழரசுக் கட்சி உணரவேண்டும்.தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்பவர்கள், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும். அக்கட்சிக்கு தலைவராக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூட 2009 இற்கு முன்பு இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

எரிபொருள் விலை உயர்வால் இந்திய சீன நிறுவனங்களே இலாபமீட்டுகின்றன: சாணக்கியன் சாடல்

எரிபொருள் விலை உயர்வால் இந்திய சீன நிறுவனங்களே இலாபமீட்டுகின்றன: சாணக்கியன் சாடல்

உதயமான தமிழ் தேசிய கூட்டணி

தற்போது நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டணியாக பதிவு செய்யப்பட்டு ஒரு அமைப்பின் கீழ் யாப்பு நிருவாகத்தின் கீழ் இருக்கின்றோம் எனவே தமிழரசுக் கட்சியும் அக்கூட்டமைப்புக்குள் வந்து இணைந்து அனைவரும் ஒருமித்து பயணிப்போமாக இருந்தால் அகில இலங்கை தமிழ் காங்கிரசும், நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் போன்றோரும் எம்முடன் இணைவார்களாக இருந்தால் தமிழ் மக்களின் பலம் சர்வதேசத்திற்கு உணர்த்தப்படும்.

இலங்கை தமிழரசு கட்சிக்குள் கடும் குழப்பம் | Confusion Within The Sri Lankan Tamil Arasu Party

2004 ஆண்டு தமிழ் தேசியக் சுட்டமைப்பு பலமாக இருக்கும்போது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் கொடுத்திருந்தார்கள். சர்வதேசம் அதனை மதித்தது. மீண்டும் அதே நிலைமைக்குச் செல்வோமாக இருந்தால் ஒற்றுமையாக பயணித்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவோமாக இருந்தால் சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்கும். இந்த நாடும்கூட தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வைத் தருவதற்கு முன்வருவார்கள்.

எமக்குச் சுதந்திரம் கிடைக்கும்வரையில் இந்நாள் கரிநாளே…

எமக்குச் சுதந்திரம் கிடைக்கும்வரையில் இந்நாள் கரிநாளே…

எனவே இலங்கைத் தமிழரசுக் கட்சி தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பயணிப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026