பயணக்கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் எச்சரிக்கையுடன் வெளிவந்த தகவல்!
Corona
people
SriLanka
Hemantha Herath
By Chanakyan
மக்களின் இரண்டு வார செயற்பாடுகளின் பின்னரே மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் முடிவுக்கு வர முடியும் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் (
Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
நாடு திறக்கப்பட்டதற்கு பின்னரான இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போதைய நிலையில் கொரோனா தொற்று அதிகரித்தால் அது கட்டுப்படுத்த முடியாத நிலைமை வரை செல்லும்.
எனினும் நேற்று வரையிலும் மக்கள் கொரோனா தொற்றினை முழுமையாக மறந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.