கொழும்பு நீதிமன்றப் படுகொலையின் பின்னணியில் இந்தியா?
இலங்கையின் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு சட்டத்தரணி போன்ற தோற்றத்துடனும், சட்டத்தரணியின் அடையாள அட்டையுடன் நுழைகின்றார்.
சட்டத்தரணியின் தேற்றத்தில் வருகின்ற ஒரு பெண் - கொலையாளியிடம் ஒரு சட்டப் புத்தகத்தை ஒப்படைக்கின்றார்.
சட்டப்புத்தகத்தின் உள்ளே - அதன் பக்கங்கள் கச்சிதமாக நீக்கப்பட்டு, அதனுள்ளே ஒரு கைத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது.
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது - விசாரணைக் கூண்டில் நின்றுகொண்டிருந்த கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக குழு ஒன்றின் தலைவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சாதாரணமாக மக்களோடு மக்களாகக் கலந்து தப்பிச் சென்றிருந்தார் கொலையாளி.
இந்தக் கொலையின் பின்னணியிலி இந்தியாவின் (India) கரங்கள் இருக்கின்றதா என்கின்ற கோணத்தில் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 15 மணி நேரம் முன்