கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Sri Lanka Police Matara Sri Lanka Police Investigation Money
By Sathangani Apr 18, 2025 06:16 AM GMT
Report

மாத்தறை (Matara) - தேவேந்திரமுனை பகுதியில் சுமார் 3 கோடி ரூபா பணத்துடன் கைதுசெய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட ஐந்து சந்தேகநபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்த தேவேந்திரமுனை காவல்துறை விசேட அதிரடிப்படையினர், சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மகிழுந்தொன்றை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.

யாழில் திடீரென மாயமான சோதனைச்சாவடிகள்

யாழில் திடீரென மாயமான சோதனைச்சாவடிகள்

மீட்கப்பட்ட பணம் மற்றும் நகை

இதன்போது, அதிலிருந்து 3 கோடியே 28 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தையும், 150 கிராம் தங்க நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Constable Arrested With 3 Crore Cash Court Order

அதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில், மகிழுந்தைச் செலுத்திய நபர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த பணம் வெளிநாட்டில் வசிக்கும் தமது சகோதரியிடமிருந்து பெறப்பட்டதாகச் சந்தேகநபரான கான்ஸ்டபிள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள்...காற்றிலே பறந்த அநுரவின் வாக்குறுதிகள் : பகிரங்கப்படுத்திய எம்.பி

ஈஸ்டர் தாக்குதல்கள்...காற்றிலே பறந்த அநுரவின் வாக்குறுதிகள் : பகிரங்கப்படுத்திய எம்.பி

தடுப்புக் காவல்

எனினும், விசாரணைகளின் போது அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதால் அவர்கள் மேலதிக விசாரணைக்காகக் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Constable Arrested With 3 Crore Cash Court Order

இந்தநிலையில், நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து அவர்களை விசாரிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

யாழில் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்