கோப் குழு கூட்டத்தில் பங்கேற்ற கனிஷ்க பண்டார : மகனின் பிரசன்னம் தொடர்பில் விளக்கமளித்த ரஞ்சித் பண்டார!
இலங்கையில் கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழு கூட்டத்தில், அதன் தலைவர் பேராசிரியர்.ரஞ்சித் பண்டாரவின் மகன் பிரசன்னமானது சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில், அது தொடர்பில் அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, ஒருங்கிணைப்பு செயலாளர் என்ற வகையில் தமது மகன் குறித்த கூட்டத்தில் பங்கேற்றதாக ரஞ்சித் பண்டார கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோப் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

எதிர்க்கட்சியின் நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
இந்த நிலையில், ஒருங்கிணைப்பு செயலாளர் என்ற வகையில் தமது மகன் கனிஷ்க பண்டார குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அவர் குறித்த பதவியியை வகிப்பதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறான செய்தி
மேலும், இந்த கூட்டத்தின் போது பலர் ஒரே நேரத்தில் கருத்து வெளியிட முற்பட்டதையடுத்து, அமைதியாகுமாறு தாம் கைகளால் சமிக்ஞை காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பல்வேறு ஊடகங்கள் தவறான முறையில் செய்தியாக்கியுள்ளதுடன், சில அரசியல்வாதிகளும் இது தொடர்பில் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக ரஞ்சித் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை, தம்மை கவலையட செய்துள்ளளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோப் குழு கூட்டத்தில், ரஞ்சித் பண்டாரவின் மகன் பிரசன்னமானது தவறு என ஸ்ரீலங்கா சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்