கொரோனாவை விடவும் தடுப்பூசிகள் ஆபத்தானவை!
vaccine
corona
sutharshini fernando pulle
denger
By Kalaimathy
விஞ்ஞான ரீதியாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் தீர்மானங்கள் மேற்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே (Sutharshini Fernando Pulle) தெரிவித்துள்ளார்.
மேலும் கொவிட் தொற்று ஏற்படுவதனை விடவும் தடுப்பூசியால் அதிக ஆபத்து ஏற்படும் என மேற்கத்திய நாடுகளில் கருத்து உள்ளது. ஆகவே வெளிநாடுகளும் இன்னமும் சரியான ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இன்னமும் தீர்மானத்திற்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அனைத்து சுகாதார பரிந்துரைகளையும் ஆராய்ந்து பார்த்து சிறுவர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.