சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இலங்கையர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட புதிய செய்தி!
sri lanka
people
shavendra silva
By Shalini
இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட பலருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்தார்.
இதற்கமைய, 1,27,83,535 (ஒரு கோடியே 27 இலட்சத்து 83 ஆயிரத்து 535) பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, நாட்டின் கொரோனா ஒழிப்பு திட்டத்தின் கீழ், நேற்று 13,832 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டது.
இதில், 11,073 பேருக்கு சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
மேலும் 1,348 பேருக்கு கொவிட்சீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும், 1,241 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.