வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் வந்த தம்பதி கைது
கட்டுநாயக்காவில் தம்பதி கைது
இந்த தம்பதிகள் துபாய்க்கு செல்ல முயன்ற போதே நேற்று(30) இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைச்சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர்கள்
கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி கல்கிசையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.
பயணத்தடை விதிப்பு
குறித்த சந்தேகநபர்கள் துபாய்க்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கல்கிசை காவல்துறையினர் விமான நிலைய காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர். இதன்படி, விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் சந்தேக நபர்களுக்கு எதிராக தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-653 விமானத்தில் துபாய்க்கு புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு இவர்கள் வந்த வேளையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
