கில்லாடி தம்பதிகள்! காயம் என கூறி ஹெரோயின் கடத்திய சம்பவம் - பொலிஸாரால் கைது
Police
Arrest
Aluthgama
SriLanka
By Chanakyan
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற தம்பதியினர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் தமது அதிசொகுசு ஜீப் வாகனத்தில் ஹெரோயினுடன் பயணித்தபோது அளுத்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 135,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் கரன்னாகொட - நேபொட - வரகாகொட பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் குறித்த ஹெரோயினை 400 பைக்கற்றுகளில் அடைந்து, அவற்றை வயிற்றில் வைத்து காயங்களுக்கு கட்டுப்போட்டுள்ளதைப் போன்று கடத்திச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 14 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி