காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் : இளைஞனுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
ஏறாவூர் காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவல்துறைஉத்தியோகத்தர் ஒருவரை ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் தாக்கியுள்ளார்.சம்பவத்தில் காவல்துறை உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார்
இதுபற்றி தெரியவருவதாவது
ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவம்
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் நோன்பு முடிப்பதற்காக சம்பவதினமான இன்று(17) அதிகாலை சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்று மேசை ஒன்றில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு சாப்பிடுவதற்காக சென்ற இளைஞனின் கால் சாப்பிட்டுக் கொண்டிருந்த காவல்துறை உத்தியோகத்தரின் மேசைக்காலில் தட்டுப்பட்டதையடுத்து மேசையில் கப்பில் இருந்த தண்ணீர் சரிந்து வீழந்துள்ளது
இதனையடுத்து தெரியாமல் தட்டுப்பட்டுவிட்டது என காவல்துறை உத்தியோகத்தரிடம் மன்னிப்பு கோரிய நிலையில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதையடுத்து காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையினர் கைது
இதனை தொடர்ந்து காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய இளைஞன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்து அவருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்ததையடுத்து நீதவான் வைத்தியசாலைக்கு சென்று இளைஞனை பார்வையிட்ட பின்னர் அவரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்