ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

J Jayalalithaa Tamil nadu Karnataka Bengaluru
By Sathangani Feb 20, 2024 11:24 AM GMT
Report

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்க‌ளை மார்ச் மாதம் 6 ஆம் திகதி தமிழக‌ அரசிடம் ஒப்படைக்குமாறு கர்நாடக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த1991- 1996ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபா சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச‌ ஒழிப்புத் துறை காவல்துறையினர் ஜெயலலிதாவின் வீட்டில் நடத்திய சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், இரத்தினக் கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

உங்களுக்கு இளநரை இருக்கிறதா..! இதை மட்டும் பயன்படுத்தினால் போதும்

உங்களுக்கு இளநரை இருக்கிறதா..! இதை மட்டும் பயன்படுத்தினால் போதும்

4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதேவேளை ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்றைய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Court To Handover 27Kg Gold Of Jayalalitha Tn Govt

இவ்வழக்கின் மேன்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, ஜெயலிதா உயிரிழந்தார். இந் நிலையில் சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் மத்திய சிறையில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தனர்.

இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கடந்த ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்தியாவுக்கு சென்று சர்சையை கிளப்பிய இலங்கை அமைச்சர்: வலுக்கும் கண்டனங்கள்

இந்தியாவுக்கு சென்று சர்சையை கிளப்பிய இலங்கை அமைச்சர்: வலுக்கும் கண்டனங்கள்

கர்நாடக அரசின் கருவூலத்தில்

அதில், கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அந்த தொகையில் இவ்வழக்கிற்காக கர்நாடக அரசு செலவு செய்த பணத்தை வழங்க வேண்டும் எனவும், மீதியுள்ள பணத்தை மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணாவின் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Court To Handover 27Kg Gold Of Jayalalitha Tn Govt

அந்த மனுவில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கூடாது. அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியிருந்த இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி,

குளவி கொட்டுக்கு இலக்காகி 73 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்காகி 73 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கர்நாடக அரசு செலவழித்த 5 கோடி ரூபா

“ஜெயலலிதாவுடன்  தொடர்புடைய தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதம் 6,7ஆம் திகதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கு கர்நாடக‌ உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Court To Handover 27Kg Gold Of Jayalalitha Tn Govt

அன்றைய தினம் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநர், புகைப்படக்காரர் ஆகியோர் முன்னிலையாகி பெற்றுக்கொள்ள வேண்டும். நகைகளைக் கொண்டு செல்வதற்கு 6 இரும்பு பெட்டிகளைக் கொண்டு வர வேண்டும்.

இவ்வழக்கை நடத்துவதற்கு கர்நாடக அரசு செலவழித்த 5 கோடி ரூபாவை தமிழக அரசு செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட‌ விசாரணை மார்ச் மாதம் 6‍ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் கொடுப்பனவு..! ஆசிரிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு

அதிகரிக்கும் கொடுப்பனவு..! ஆசிரிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021