கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தில் 29 நாட்களுக்கு பின்னரும் வைரஸ் உள்ளமை கண்டுபிடிப்பு
srilanka
covid19
death
By Vasanth
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தில் 29 நாட்களுக்குப் பின்னரும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தநிலையில் சடலத்தை பொறுப்பேற்பதற்கு அவரது உறவினர்கள் முன்வராத நிலையில் உடல் குளிரூட்டப்பட்ட சவச்சாலையில் வைக்கப்பட்டது.
29 நாட்கள் அந்த உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், சடலத்தை தகனம் செய்ய சுகாதார பணியாளர்கள் பெற்றபோது பி.சி.ஆர் பரிசோதனையொன்றை நடத்தினர்.
அதன்போதே குறித்த உடலில் கொரோனா தொற்று அப்போதும் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி