கொரோனாவுடன் போட்டியிடும் பிறிதொரு வைரஸ்! அலட்சியம் வேண்டாம் - வைத்தியத்துறை எச்சரிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்துடன் டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் நோய்களும் பரவி வருவதால், பொது மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
தற்போதைய சூழ்நிலையில், காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் மற்றவர்களுடன் தொடர்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், கொரோனா வைரஸுக்கு மேலதிகமாக டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் நோய்களும் தற்போது, பரவி வருவதால், இவ்வாறான அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
"பெரும்பாலான நேரங்களில் நாம் மூன்று பெரிய நோய்களைப் பற்றி கவலைப்பட வேண்டியிருக்கும், முதலில் நாம் அனைவரும் அறிந்த கொரோனா நோய், இரண்டாவது டெங்கு இந்த நாட்களில் அதிகரித்து வருகிறது, மூன்றாவது சளி, இது எந்த நேரத்திலும் பரவுகிறது.
எனவே இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இல்லையெனில் இது இல்லை, இது அப்படி இல்லை என்று நாம் புறக்கணிக்கக்கூடாது, மேலும் உங்களுக்கு 48 மணிநேரத்திற்கு மேல் காய்ச்சல் இருந்தால், சரிபார்க்கவும் டெங்கு காய்ச்சலாக இருக்கிறதா என்று பாருங்கள். உங்களுக்கு தேவையான பரிசோதனைகளை செய்து கொள்வது முக்கியமாகும் என்று அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
