இலங்கையில் மேலும் 45 பேர் பலி! 1,917 புதிய தொற்றாளர்கள் கண்டறிவு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் நேற்றைய தினம் (23) மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,814 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று இதுவரை 1,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 248,026 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.