தடுப்பூசி தொடர்பில் இலங்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை -வெளிவந்துள்ள குற்றச்சாட்டு
srilanka
people
covidvaccine
amnestyinternational
By Sumithiran
இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்கள் சிறிதளவே வெளியாகின்றன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா இது தடுப்பூசியை பெற முயலும் மக்களுக்கு தடையாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் தடுப்பூசிக்கான பெரும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக தேசிய அளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு சர்வதேச சமூகம் உதவவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 2 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி