மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அச்சமே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சந்தை தரவுகளின்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 1.22 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 106.35 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
96.97 அமெரிக்க டொலராகப் பதிவு
மேலும், சந்தைத் தரவுகளின்படி, ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 1.17 சதவீதம் அதிகரித்து, 96.97 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஒரு பீப்பாய் மெர்பன் (Murban Crude) கச்சா எண்ணெயின் விலை 2.74 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 105.95 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அமெரிக்க - ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 100 டொலருக்கும் அதிகமாக வர்த்தகமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |