மீன்பிடிக்கச் சென்றவர் முதலைக்கு இரையான சோகம்!
திருக்கோவிலில் உள்ள ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாகாமம் தாலிபோட்டாற்றில் வழமைபோல நேற்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆற்றில் இருந்த முதலை அவரை பிடித்து நீரினில் இழுத்துச் சென்று கடித்து குதறியதையடுத்து அவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
மண்டானை திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்தி ( 55 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.