பசில் பிடியாணை! வெளிந்தது அநுரவின் காணி பூனை - நடப்பது என்ன?
சிறிலங்கா அரச தலைவர் அநுரகுமார திசாநாயக்காவின் கிழக்குப்பயணத்தில் தமிழர்களின் அரசியல் பிராண்ட் முகங்கள் அநுரவின் பக்கத்தில் முண்டியடித்து நின்று திரைஇழுப்பு காட்சிகளை செய்து நல்லெண்ணம் காட்டினர்.
இதன் பின்னர் தமிழ் அரசியல் கிரியேட்டிவ் டிசைன்களின் இந்த திரைஇழுப்பு காட்சிகளும் முன்னர் மகிந்த அணி பின்னர் தமிழரசு என்ற சாணக்கியங்களின் அநுர குலாவல் காட்சிகள் எல்லாம் தெரிந்தன.
அரசியலில் இவ்வாறான காட்சிகள் சகஜம் என நினைப்பதற்கிடையில் தமிழர்களை கொல்லவேண்டும் எரிக்கவேண்டும் என்பது உட்பட்ட பல ஆவேச கருத்துக்களை முழங்கிய அம்பிட்டிய சுமண ரத்தன தேரரையும் அநுர சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் எதிர்நேர்ககும் இன்னல்கள் தொடர்பான பல பிரச்சினைகளையும் கவலைகளையும் தான் அநுரவிடம் எழுப்பிய போது அஞ்சற்க என அநுர தனக்கு உறுதியளித்ததாகவும் சுமனரத்தனர் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் கிழக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்து அநுர வெளியிட்ட கருத்துகளில் பூனைக்குட்டி பையில் இருந்து வெளிவந்தது.
கிழக்கில் உள்ள காணிகள் குறிப்பிட்ட இனத்திற்குரியவை அல்ல மாறாக அவை அரச காணிகள் என்ற ரீதியில் அவை கையாளப்பட வேண்டும் எனவும் கிழக்கில் காணிப் பகிர்வு இன விகிதாசாரத்தின் அடிப்படையில் இருக்கவேண்டிது இல்லை எனவும் இந்த பூனைக்குட்டி வெளிவந்த நிலையில் பசில் ராஜபச்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவில் தங்கியுள்ள அவரை எப்படி கைது செய்வது என்பது ஒரு முக்கிய விடயம் என்ற நிலையில் இந்தவிடயங்களை தாங்கி வருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |