இலங்கை நாடாளுமன்றத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது, நாடாளுளுமன்றத்தின் 2025 ஆண்டு செயல்திறன் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு (SLCERT), ஆய்வு காலத்தில் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த ஒரு மதிப்பீட்டை நடத்தியுள்ளது.
பாதுகாப்பு குறைபாடுகள்
இந்த மதிப்பீடு, இணையப் பாதுகாப்பு தொடர்பான 56 பகுதிகளை ஆய்வு செய்தது, அவற்றில் 46 பகுதிளுக்கு உயர் மட்ட அபாயம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகல், முக்கியத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சீர்குலைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ வலைத்தளங்களைச் சிதைத்தல் உள்ளிட்ட தீங்கிழைக்கும் இணையவழிச் செயல்பாடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இணையப் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |