நாளுக்கு நாள் உக்கிரமடையும் போராட்டம் - பதவி விலகுமா கோட்டாபய அரசாங்கம்!
colombo
protest
galle face
srilankan economic crisis
gotagogama
7th day
By Kanna
கொழும்பு - காலி முகத்திடலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும், அரசாங்கம் பதவி விலகுவது குறித்தோ மக்களின் போராட்டங்களுக்கான தீர்வு குறித்தோ எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டி இன்றுடன் ஏழாவது நாளாக போராடி வருகின்றனர்.
இதேவேளை, நாளுக்கு நாள் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.






5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி