ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்: அறிவித்தது CENTCOM
ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், கிழக்கு நேரப்படி (ET) பிற்பகல் 3 மணி முதல் ஈரான் மீது ஒரு சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கட்டளையகம்
ஈரானிய இராணுவத் திறன்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CENTCOM launched a round of strikes against Iran at 3 p.m. ET today for the seventh consecutive night. The strikes are designed to continue degrading Iranian military capabilities at the Commander in Chief's direction.
— U.S. Central Command (@CENTCOM) July 17, 2026
இருப்பினும், இந்தத் தாக்குதல்களின் இலக்குகள் அல்லது அதன் விரிவான அளவு குறித்த மேலதிக விவரங்களை மத்திய கட்டளையகம் (CENTCOM) வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு முன்பே சிஐடிக்குக் கிடைத்த 129 பயங்கரவாதிகளின் பட்டியல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |