புத்தளத்தில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் : காவல்துறையினர் தீவிர விசாரணை

Sri Lanka Police Puttalam Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Jul 02, 2024 05:52 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

புத்தளம் (Puttalam) உடப்பு காவல் பிரிவுக்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது இன்று (2) பகல் கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில், சடலம் கரையொதுங்கிய பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் கடற்கரையோரத்தில் இவ்வாறு சடலமொன்று கிடப்பதை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : கிடைக்கப்போகும் கடன்வசதி

பெண்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : கிடைக்கப்போகும் கடன்வசதி

பெண்ணின் சடலம்

இதையடுத்து, உடனடியாக பிரதேச மக்களுடன் இணைந்து அந்த பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக காவல்துறையினருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

புத்தளத்தில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் : காவல்துறையினர் தீவிர விசாரணை | Dead Body Of A Woman Washed Ashore At Putthalam

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த உடப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் சடலமாக கரையொதுங்கிய பெண் 40 வயது முதல் 50 வயதுக்கு இணைப்பட்டவர் என தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, குறித்த பெண்ணின் சடலம் உருக்குலையாத நிலையில் ஆடை எதுவுமின்றி காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக நீளமான சைக்கிள்: கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள்

உலகின் மிக நீளமான சைக்கிள்: கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள்

மேலதிக விசாரணை

சிறுநீர பட்டை பொருத்தப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளமையினால் அந்த பெண் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவராக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தளத்தில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் : காவல்துறையினர் தீவிர விசாரணை | Dead Body Of A Woman Washed Ashore At Putthalam

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.வசீம் ராஜா, சடலத்தை பார்வையிட்டு நீதிவான் விசாரணையை அடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறு கரையொதுங்கிய குறித்த பெண்ணின் சடலம் யாருடையது என்பது தொடர்பில் உடப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தில் உள்ள இந்திய பிரஜைகளுக்கு வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் உள்ள இந்திய பிரஜைகளுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024