தென்னிலங்கையில் பதற்றம்! உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் பாரியளவிலான மீன்கள்
By Shalini
மாத்தறை - பொல்ஹேன கடற்கரையில் கடந்த சில நாட்களாக உயிரிழந்த நிலையில் ஏராளமான மீன்கள் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து காவல்துறையினரும், அப்பகுதி மக்களும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனமான நாராவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு இறந்த இரண்டு திமிங்கலங்களின் உடல்களும் குறித்த கடற்கரையில் கரையொதுங்கியிருந்தன.
இவ்வாறு அடிக்கடி உயிரிழந்த நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்குவதால் எதும் ஆபத்து வந்துவிடுமோ என்று அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
இதையடுத்து, நாரா நிறுவனத்தின் நிபுணர் உபுல் லியனகேவின் அறிவுறுத்தலின் பேரில் ஆய்வாளர்கள் குழு அந்த பகுதிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி