150 கோடி நட்டஈடு கோரிய ஆசு மாரசிங்க - வேண்டுமென்றே ஹிருணிகா தீங்கிழைப்பதாக குற்றச்சாட்டு
அதிபரின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க, அவரது முன்னாள் காதலியான ஆதர்ஷா கரந்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரிடம், தனது சட்டத்தரணி ஊடாக 1.5 பில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்திற்காக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ஆசு மாரசிங்கவின் சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு, இரு தரப்பினரும் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து (டிச. 29) 14 நாட்களுக்குள் வழங்கத் தவறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடுமையாக நிராகரிப்பு
டிசம்பர் 24 அன்று, சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட காணொளிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) மாரசிங்க முறைப்பாடு செய்தார்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட குறித்த காணொளியில் விலங்கை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டை அவர் கடுமையாக நிராகரித்தார்.
மேற்கூறிய பெண் இயக்குநராக பணியாற்றும் தனது வாடிக்கையாளர் மற்றும் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட தகராறில் கேள்விக்குரிய காணொளி சிதைக்கப்பட்டது என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
