டெங்கு நோய் தீவிரம் : மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 74,478 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மருத்துவப் பரிசோதனை
முன்னதாக, நோயாளர்களின் எண்ணிக்கை 74,000ஐத் தாண்டியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது
இந்த நிலையில் காய்ச்சல் அல்லது டெங்கு நோய்க்கான ஏனைய அறிகுறிகள் தென்படுமாயின், காலதாமதம் செய்யாது உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 15,596 டெங்கு நோயாளர்கள் பதிவான நிலையில் முதலிடத்திலும், 14,857 நோயாளர்கள் பதிவான நிலையில் கொழும்பு இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |