பெருந்தொற்று நிலையை எட்டும் டெங்கு தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்த ஆண்டு இலங்கையில் டெங்கு பாதிப்புகள் எதிர்பார்க்கப்பட்ட வரம்புகளைத் தாண்டும் அபாயம் உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் அனில் ஜசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நோய் வேகமாகப் பரவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல்
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 5,600 டெங்கு பாதிப்புகளும், அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் மொத்தம் 8,500 பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாகவும், இது டெங்கு பாதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பொதுவாக, டெங்கு காய்ச்சல் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருந்தொற்று நிலையை அடையும் போக்கைக் கொண்டுள்ளது.
இந்த வி்டயத்தில் சிவப்பு மதிப்பு 2017-ல் இருந்தது. இந்த ஆண்டு, அதன் வரைபடத்தில் நீல மதிப்பு அதிகரித்து வருகிறது.
இதை நாம் குறைக்க வேண்டும். எனவே, இந்த நேரத்தில் செயல்படுவது மிகவும் முக்கியம். ஆண்டு முழுவதும் நடவடிக்கை எடுப்பது அவசியம். இது காலநிலை நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |