கௌரவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் ரஷ்ய அதிபர்!
பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து வருகிற நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin) சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌரவத் தவைவர் மற்றும் தூதுவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் புடின் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌவரத் தலைவராக இருந்து வந்தார். 2014-ம் ஆண்டு ஜூடோ விளையாட்டின் மிக உயர்ந்த நிலையான எட்டாவது டான் விருதையும் புடின் பெற்றுள்ளார்.
இதேபோல், போலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் 2022-ம் ஆண்டுக்கான உலகக் கோள்பை ப்ளே- ஆப் விளையாட்டுகளில் ரஷ்யாவுடன் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து இன்று 4-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன.
கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷ்ய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
