பிரதியமைச்சர் அருணுக்கும் புலிகளுக்கும் தொடர்பாம்..! புதுக்கதை புனையும் விமல்
சிறிலங்காவில் அடிக்கடி தமது கருத்துக்களால் தமது இனவாத இருப்பை வெளிப்படுத்த முனைகின்ற ஒரு சிலரில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மிக முக்கியமானவர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக எப்போதும் இனவாதத்தை கக்கிவரும் இவர், ஒரு தமிழர் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதையே குறிவைத்து பேசிவருகிறார்.
இந்த நிலையில், பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திராவுக்கு புலிகளின் தொடர்பாளர் எனவும் அவர் வல்வெட்டிதுறைக்கு பிரச்சாரக்கூட்டத்திற்கு சென்று புலிகளின் தலைவருக்கு சிலை வைப்பதாக கூறியதாகவும் ஒரு வன்மத்தை வெளிப்படுத்தி மேலும் பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
அதேவேளை வெள்ளை வான்கள் திருகோணமலை கடற்படை முகாமுக்குள் சுதந்திரமாக நடமாடியதாக ITJP குறிப்பிட்டிருக்கும் இன்னுமொரு முக்கிய விடயம் தொடர்பிலும் அதேபோல செம்மணி விவகாரத்தில் வெளிப்படும் மர்மங்கள் தொடர்பிலும் தமிழர்களை மீண்டும் காட்டிக்கொடுக்கப்போகிறாரா என்ற ஒரு கேள்விக்கான பதிலையும் தேடி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
