தேசபந்துவை அடுத்து இன்று நீதிமன்றில் சரணடைந்த அறுவர்

Sri Lanka Police Law and Order Prison Deshabandu Tennakoon
By Sathangani Mar 21, 2025 06:11 AM GMT
Report

புதிய இணைப்பு

2023 ஆம் ஆண்டு வெலிகம - பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் இன்று (21) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்

2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 4ஆம் திகதி வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமார, நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

தேசபந்துவை அடுத்து இன்று நீதிமன்றில் சரணடைந்த அறுவர் | Deshabandhu Is Remanded In Thumbara Prison

பின்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முன்தினம் (19) நீதிமன்றில் சரணடைந்தார்.

இந்த நிலையில் ஏனைய ஆறு பேரும் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தும்பர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச நேற்று (20) உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தேசபந்து தென்னகோன் சிறைச்சாலையின் தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையில் விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்

இலங்கையில் விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்

தாக்கல் செய்யப்பட்ட மனு

இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தேசபந்து தென்னகோனுக்கு மேலதிகமாக ஏனைய 7 சந்தேநபர்களை கைது செய்ய வேண்டாம் என தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை (ரிட்) மனு விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசபந்துவை அடுத்து இன்று நீதிமன்றில் சரணடைந்த அறுவர் | Deshabandhu Is Remanded In Thumbara Prison

குறித்த மனு இன்று (21) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர் தொடர்பிலும் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்

யாழில் அரச பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் அரச பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி