உயிருக்கு அச்சுறுத்தல் - பாதுகாப்பு கோரும் தேசபந்து தென்னகோன்
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் (Priyantha weerasooriya) முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் கஞ்சிபானி இம்ரானிடமிருந்து அச்சுறுத்தல் காணப்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது.
அமைச்சரின் நிலைப்பாடு
இந்தநிலையில் தனது பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் (Ananda Wijepala) ஊடகமொன்று வினவியுள்ளது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், 'தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம்
எனினும், இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை தேசபந்து தென்னகோனின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க காவல்துறையினரினால் பாதுகாப்பு மதிப்பாய்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதன் ஊடாக அவருக்குப் பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டால், பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
