கைது செய்யப்பட்ட ஐஸ் பாரவூர்தியின் உரிமையாளருக்கு நீதிமன்றின் உத்தரவு
தங்காலை சீனிமோதர பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போது கைது செய்யப்பட்ட பாரவூர்தியின் உரிமையாளரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கல்கிஸை நீதவான் பசன் அமரசேன கல்கிஸை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இரத்மலானை என்ற முகவரியில் வசிப்பவர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வலவ்வத்த ஸ்ரீ தர்மராம வீதி இரத்மலானை என்ற முகவரியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
இலக்கம் 43 கொட்டம்பகவதுகொட, சீனிமோதர, தங்காலை முகவரி கொண்ட வீட்டில் இரண்டு சடலங்கள் நேற்று மீட்கப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பறியிருந்தனர்.
கல்கிஸை காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
அதன்படி, காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள், பாரவூர்தியின் உரிமையாளரான குறித்த சந்தேகநபரை 11 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்து கல்கிஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், இன்று (23) சந்தேக நபர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
