இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவை ஆரம்பிக்க உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வியட்நாம் எயார்லைன்ஸ் விமான சேவையானது இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உம், ஜனாதிபதி அநுர இணைந்து பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அநுர இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலர்
அதேநேரம் இருதரப்பு வர்த்தகம் 2030-ஆம் ஆண்டளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அனைத்துத் துறைகளிலும் இருநாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்த வியட்நாம் விரும்புவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டோ லாம் தெரிவித்துள்ளார்.
இதேதேவளை சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்று (08) நாடாளுமன்றத்தில் சோசலிச வியட்நாம் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |