நாளை முதல் கட்டுநாயக்காவில் நேரடியாக தரையிறங்கவுள்ள விமானங்கள்
start
bandaranayake airport
flight service
By Jaso
நாளை வெள்ளிக்கிழமை முதல் 07 விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை (DIRECT FLIGHTS) ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதன்படி, 05 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் நேரடி சேவைகளை மேற்கொள்ளவுள்ளன. அவற்றில் ரஷ்யாவின் இரண்டு விமான நிறுவனங்களாகிய AEROFOLT மற்றும் AZUR AIR ஆகியன நாளை முதல் நேரடி விமான சேவைகளை நடத்தவுள்ளன.
இத்தாலியின் NEOS விமான நிறுவனம், பிரான்ஸின் AIRFRANCE நிறுவனம், பங்களாதேஸின் US BANGLA AIRLINES நிறுவனம் ஆகியனவும் நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமானங்களை இயக்கவுள்ளன.
அதேவேளை, இஸ்ரேலின் ARKIA விமான நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் SWISSAIR நிறுவனமும் இலங்கைக்கான நேரடி விமான சேவகைளை ஆரம்பிக்க விருப்பம் வெளியிட்டுள்ளன.