ஆளும் தரப்பு பங்காளி கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி - கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு
அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை வழங்கியமை தொடர்பில் ஆளும் தரப்பின் பங்காளி கட்சிகள் போர்க்கொடியை தூக்கியுள்ளன.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என அமைச்சர்களான விமல் வீரவன்ச(Wimal Weerawansa), உதய கம்மன்பில(Udaya gamanpila), வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) உட்பட 10 கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்ததை வெற்றியளிக்காத நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவை சந்திப்பதற்கு கடிதம் அனுப்பியிருந்தனர். எனினும் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ(mahinda rajapaksha) மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன்(basil rajapaksha) கலந்துரையாடுமாறு அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ(gotabaya rajapaksha) ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆளும் கட்சியின் 11 பங்காளி கட்சிகளுக்கு நேரத்தை ஒதுக்கித்தருமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு, ஜனாதிபதியால் அனுப்பிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுப்பியுள்ள பதில் கடிதம் தொடர்பில் ஆளும் கட்சியின் 11 பங்காளி கட்சிகளின் தலைவர்களும் இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.