பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவிகரிப்பது பற்றிய கலந்துரையாடல்
பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்றது.
மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் தொகுதியில் காணி உரிமையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையில் இடம் பெற்றது.
444 ஏக்கர் பொதுமக்களின் காணிகள்
இதன்போது கடந்த 04 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நஷ்ட ஈடு வழங்கும் கூட்டத்தில் தமக்கு தமது காணிகள் வேண்டும் என்றும் தேவையான காணிகளை பெறுவதை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறினர்.

பலாலி விமான நிலையத்துக்கு என மூன்று கட்ட ஓடுதளங்களுக்கும் தேவையான 444 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் ஏற்கனவே 1985 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் விமான நிலையத்தினை விஸ்தரிப்பதற்கு போதுமானதாக காணப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |