தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு தேமுதிக தொடர்ந்தும் துணை நிற்கும் : மறைந்த விஜயகாந்த் மனைவி உறுதி

Sri Lankan Tamils Tamils Vijayakanth Northern Province of Sri Lanka DMDK
By Eunice Ruth Jan 03, 2024 11:57 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

மறைந்த தேமுதிக தலைவர் புரட்சிக்கலைஞர் "கப்டன்" விஜயகாந்த்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையால், அதன் தற்போதைய பொறுப்பாளர் வி.ஜெயாத்தனின் கையொப்பமிட்ட இரங்கல் அறிக்கை, இன்று (3) கையளிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்தின் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தமிழகம்-சென்னையில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கப்டனின் மனைவி மற்றும் மகன்கள், சண்முக பாண்டியன் ஆகியோர் உட்பட தமிழீழ உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலைப் போராட்டங்கள்

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எப்போதெல்லாம் நியாயப்பாடுகளுடன் கூடிய விடுதலைப் போராட்டங்கள் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்காக முழு உலகும் பாடுபடும்.

தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு தேமுதிக தொடர்ந்தும் துணை நிற்கும் : மறைந்த விஜயகாந்த் மனைவி உறுதி | Dmdk Will Support Tamil Eelam People Vijayakanth

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென அச்சம்

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென அச்சம்

அது போல அவற்றுக்கான ஆதரவும் உலகம் முழுவதிலுமிருந்தும் கிடைக்கும்.

தமிழீழ போராட்டத்திற்கான ஆதரவு 

அவ்வாறுதான் தமிழீழ போராட்டத்திற்காக தமிழகத்திலிருந்து எழுகின்ற ஆதரவுக் குரல்களும், உதவிகளும் காலம் காலமாக வெவ்வேறு தலைவர்களாலும், மக்களாலும் தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கிற விடயமாகும்.

அவ்வாறு தமிழீழப் போராட்டத்திற்காக இதயசுத்தியுடன் பல ஆண்டுகளாக ஒலித்து வந்த குரல் விஜயகாந்த்துடையது.

தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு தேமுதிக தொடர்ந்தும் துணை நிற்கும் : மறைந்த விஜயகாந்த் மனைவி உறுதி | Dmdk Will Support Tamil Eelam People Vijayakanth

மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஞ்சன விஜேசேகர பணிப்புரை

மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஞ்சன விஜேசேகர பணிப்புரை

ஈடுசெய்ய முடியாத இழப்பு 

சிறந்த நடிகர், வெற்றிகரமான அரசியல் தலைவர், சிறந்த மனிதர், மிகச்சிறந்த ஆளுமைத்திறன் கொண்டவர் என்கிற பல் பரிமாணங்களைக் கொண்ட அவரின் இழப்பு குடும்பத்தினர், நண்பர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் தமிழக, தமிழீழ மக்களுக்கும் பல்வேறு வழிகளில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தனிப்பட்ட நலன்கள் மற்றும் தமது அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்பவர்கள் மத்தியில் விஜயகாந்த் தொடர்ச்சியாக தமிழீழ போராட்டத்திற்கான ஆதரவுக் குரலாக ஒலித்து வந்ததுடன் ஈழத் தமிழ் மக்கள் மேல் உண்மையான கரிசனை கொண்டிருந்தார்.

தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு தேமுதிக தொடர்ந்தும் துணை நிற்கும் : மறைந்த விஜயகாந்த் மனைவி உறுதி | Dmdk Will Support Tamil Eelam People Vijayakanth

வற் வரி தொடர்பில் கருத்து வெளியிடும் அரசியல் கட்சிகள் : பொய் பிராச்சாரங்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு (படங்கள்)

வற் வரி தொடர்பில் கருத்து வெளியிடும் அரசியல் கட்சிகள் : பொய் பிராச்சாரங்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு (படங்கள்)

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஈழத்தில் நடைபெற்றது ‘இனவழிப்பு’ என்பதனை வெளிப்படையாக பேசியிருந்தார்.

ஆயதப்போராட்டம் 

தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு பல்வேறு வழிகளிலும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகிய போதும் தமது தாயக விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தமிழ் மக்களுக்கு விஜயகாந்த்தின் மரணம் ஈடுசெய்ய முடியாததாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேமுதிக தமிழ் மக்களுக்காக செயல்படும்

கடந்த காலங்களில் "புரட்சிக் கலைஞர்" எவ்வாறு தமிழீழ மக்களின் போராட்டத்திற்கும் அவர்களுடைய சுதந்திர வாழ்க்கைக்கும் துணை நின்றாரோ, அதேபோன்று எதிர்காலங்களிலும் தேசிய திராவிட முற்போக்கு கழகம் தொடர்ந்தும் செயற்படும் என அதன் பொதுச்செயலாளரும் அவரது மனைவியுமான பிரேமலதா இந்த சந்திப்பின் நிறைவில், உணர்வு பூர்வமாகவும் உறுதியாகவும் கூறியுள்ளார். 

தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு தேமுதிக தொடர்ந்தும் துணை நிற்கும் : மறைந்த விஜயகாந்த் மனைவி உறுதி | Dmdk Will Support Tamil Eelam People Vijayakanth

இந்தியாவில் கொழுந்து விட்டு எரிந்த மேம்பாலம்: சாலை நடுவே கவிழ்ந்த எரிபொருள் தாங்கி (காணொளி)

இந்தியாவில் கொழுந்து விட்டு எரிந்த மேம்பாலம்: சாலை நடுவே கவிழ்ந்த எரிபொருள் தாங்கி (காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026