200 இடங்களில் தீ.மு.க-வுக்கு வெற்றி! வாக்களிப்பின் பின் அடித்துக்கூறிய பன்னீர்செல்வம்
மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வேட்பாளரரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வரும் நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை கூறியுள்ளார்.
தேனி பெரியகுளத்தில் தி.மு.க வேட்பாளராக முதல் வாக்கை பதிவு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
மதச்சார்பற்ற கூட்டணி
“தமிழகம் எங்கும் அனைத்து மக்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் உற்சகமாக செலுத்தி வருகின்றனர். மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும்.

கடந்த 5 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.தமிழ்நாடு சுற்றுலா இதன் மூலம் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியை மக்கள் மீண்டும் உறுதி செய்வார்கள்.
தமிழக முதல்வராக இரண்டாம் முறையாக மீண்டும் மு.க.ஸ்டாலின் பதவியேற்று கொள்ளும் நிலை ஏற்பட உள்ளது” என்றார்.
இதன்போது த.வெ.க தலைவர் குறித்த கருத்தை வெளியிட்ட அவர்,
விஜய்யின் அரசியல்
வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அவர் எத்தனை சதவீதம் வாக்குகளை பெற உள்ளாரோ அதை பொறுத்தே விஜய்யின் அரசியல் எதிர்காலம் அமையும்.

அவர் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருக்கிறாரா, இல்லையா என்பது மக்களின் முடிவு. வாக்குகள் எண்ணும் நாளில் இதுபற்றி தெரிந்து விடும்.
எனினும் மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
தேனி மாவட்டத்தில் இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நான் உட்பட மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவோம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |