இவரைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
போலி நாணயத்தாள் தொடர்பான வழக்கில் பொய்யான தகவல்களை அளித்து மறைந்து வாழும் மேற்படி பெண் தொடர்பில் அறிந்தவர்கள் தகவல் வழங்குமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
மேற்படி வழக்கிவ் உயர்நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகுவதை தவிர்த்து குறித்த பெண் மறைந்து வாழ்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொய்யான தகவல்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (696641439) தம்பே சிமிகொட பிரதேசத்தில் வசிக்கும் கும்பலாத்தர ஆராச்சிகே கீதானி தம்மிகா (54) என்ற சந்தேக நபர், ஸ்ரீயலதா சில்வா என்ற போலியான பெயரில் 211 கத்ததர நாகொட வீதியில் (தேசிய அடையாள அட்டை இலக்கம் 718262925) வசிப்பதாக காவல்துறையினருக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளார்.

தகவல் தெரிந்தவர்கள்
மேற்படி புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், போலி நாணயப் பணியகத்தின் பொது தொலைபேசி இலக்கமான 0112-326670 க்கு அல்லது 0718-594901 தெரிவிக்குமாறு காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்