பெண் மருத்துவரின் பதற வைக்கும் செயல் - பறிபோயின அழகான இரண்டு உயிர்கள்
மகளை கொன்று தானும் உயிரை மாய்த்த மருத்துவர்
தனது 10 வயது மகளை கொன்ற பெண் மருத்துவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெங்களூரிலேயே இந்த அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பெங்களூரில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சைமா (39). இந்த தம்பதிக்கு 10 வயதில் ஆராதனா என்ற மகள் இருந்தாள். நாராயண் மற்றும் சைமா பல் மருத்துவர்கள். இந்த நிலையில், நாராயண் வழக்கம் போல தான் நடத்தி வரும் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
வீட்டுக்கு வந்த கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
ஆனால் தனது மனைவி வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வராததால், அவரது செல்போனுக்கு பல முறை நாராயண் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அப்படி இருந்தும் சைமா தனது செல்போனை எடுத்து பேசவில்லை. இதன் காரணமாக சந்தேகம் அடைந்த நாராயண், வீட்டுக்கு வந்த போது படுக்கை அறையில் தனது மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சைமா, பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் சந்தேகம்
நாராயண், சைமா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சிறிய சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்து தனது மகளை கொன்று, சைமா தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
அதே நேரத்தில் சைமா சாவில் சில சந்தேகங்கள் இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் நாராயணிடம் நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.